Wednesday 19 September 2012

பள்ளர்கள் தலித்களா ?

                   
                                      
              பள்ளர் (அ) மள்ளர்  இனத்தினர்  எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி( MBC ), எப்.சி (FC), டி.என்.சி( DNC ) என அனைத்துப்  பட்டியலிலும்  உள்ளனர். விடுதலைக்கு  முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் இருந்த சாதிகளை சமூக அடிப்படையில் முற்ப்பட்ட சமூகத்தினர்  (FC) எனவும் பிற்ப்படுத்தப்பட்ட  சமூகத்தவர்  (OBC) எனவும் பிரித்தனர். இவர்கள் இல்லாமல் தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தீட்டுப்படுத்தக்கூடியதாக கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில்  76 சாதிகளை உள்ளடக்கி பட்டியல் சாதியினர் (SC)  என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு சாதியை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 11 வரையறைகளை வகுத்திருந்தது அவற்றில் முக்கியமானவை,  அ) தீண்டாமையை அனுபவிப்பவர்கள் ஆ) கோவிலில் நுழைய அனுமதி இல்லாதவர்கள்  இ) பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் ஈ) மாட்டுக்கறி உண்பவர்கள்  உ) பசுவை வணங்காதவர்கள்  ஊ) தீட்டுப்படுத்தும் தொழிலைச் செய்பவர்கள் என்பவைகளாகும்.
                மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய  "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக்  கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள்  குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,

   அ)  குடும்பன் - எஸ்.சி  பட்டியலிலும் ( SC - 35
   ஆ) மூப்பன் -பி.சி  பட்டியலிலும் (BC -  65  )
   இ)  காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )
   ஈ)  காலடி -- பி.சி  பட்டியலிலும் (DNC - 28  )
   உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16  ) உள்ளன.

         தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக்  கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும்   வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .

         தமிழ்நாட்டின் பழம்பெரும்  கோவில்களான மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன் கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு  இன்று வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !

       1993 - ல் நடைபெற்ற மதுரை  மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப்  போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே  மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று  அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.

           தமிழ் நாடு மட்டுமில்லாது இந்தியா முழுவதுமே அனைத்து பட்டியல்களிலும் (SC, BC, MBC, DNC, FC) உள்ள பள்ளர்களை தலித் ,தாழ்த்தபட்டவன் ,எஸ்.சி(SC),ஆதி திராவிடர் என அழைப்பது பள்ளர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டமிட்ட சதியே  ஆகும். பள்ளர்களின் அடையாளத்தை   மட்டுமில்லாது   "பள்ளர்களே சேர சோழ பாண்டியர் " எனும் வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் மறைத்து " இவர்கள் யார் ?" என்பதை உணர்ந்துவிடாமல் , பள்ளர்களை உளவியல் ரீதியகவும் முடக்கும் திட்டமிடபட்ட சதியே  ஆகும்

6 comments:

  1. we should retrive back our rights...!

    ReplyDelete
  2. dear sir,

    T.JEYAKUMAR mallar was broad.VATHIRIYAR ENBADU SEPARATE COMMUNITY.

    ReplyDelete
  3. pandian vathiriyar tuty26 September 2014 at 08:14

    1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது. வரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் , வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர். அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள் இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

    ReplyDelete
    Replies
    1. 1936 ல் வாதிரியார் பெயர் எஸ்.சி பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      Delete
  4. திருமுறைத்தலங்கள்
    நடுநாட்டுத் தலம்
    திருத்தினைநகர் ( தீர்த்தனகிரி)
    http://www.kamakoti.org/tamil/tirumurai39.htm

    மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.
    தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
    பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.
    இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
    இறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
    தலமரம் - கொன்றை.
    தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
    அஞ்சல் முகவரி -
    அ.மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
    தீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.
    கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்
    THARPODHU INTHA URIL ULLA ANAIVARUM INDIRAKULA VANNIYAR , SOUTH ARCOT DT KIL YARUM PALLAR ILLAI ... PERIYAIYAN, AVAN MANIVI PERIYAYI , PERARKAL INTRUM SOUTH ARCOT DT KIL ULLA VANNIYARKAL MATUM VAITHU ULLARKAL, ADHARAM,, VIRDHACHALAM MAKKAL THOGAI KANAKEDUPU 2011, INTHA VARALARTU UNMAIYAI SILA PATHIRIKKAGAI MATHI ELUTHUKENTRANA.. ADHARAM ...DINAMALAR TEMPLE PAKKATHIUL THIRUTHINAINAGAR VARALARU PARKAUM.. AVARKAL PALLAR ENRU ELUTHUVATHARKA PATHILAGA THALTHAPATTAVAR ENRTU ELUTHI ULLARKAL... MATTRA PATHIRIGAIGAL... KUDIYANAVAN ENRTU ELUTHI ULLARKAL....ADHARAM VAGESAR PERAVAI.COM, ...

    ReplyDelete
  5. https://www.google.com.sa/maps/place/Al+Qarah+Mountain/@25.4118572,49.6929696,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPE22SU-RAWtlkUO1CjvvMC6xxRyeUqzQOoI-LD!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPE22SU-RAWtlkUO1CjvvMC6xxRyeUqzQOoI-LD%3Dw203-h358-k-no!7i1080!8i1906!4m5!3m4!1s0x3e3794b455555555:0x1b51c134e2a26d78!8m2!3d25.4118806!4d49.6927071?hl=en

    ReplyDelete